தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடல்!

யாழ் மாநகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று (31) அவசர கலந்துரையாடலிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேற்று இடம்பெற்ற யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதி உறுப்பினர்களின் சதி நடவடிக்கையினால், கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் ஆனல்ட் தோல்வியடைந்தார். கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் சொந்தக்கட்சிக்கே முதுகில் குத்தி, ஈ.பி.டி.பி ஆதரவு மணிவணணன் வெற்றியைடையும் நிலையை உருவாக்கினார். இந்த நிலையில் இன்று கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துரையாடலிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.